Sunday 26 July 2020

செம்பூவே பூவே - சிறைச்சாலை



இசை : இளையராஜா பாடல் : அறிவுமதி
குரல்கள் : எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கே.எஸ். சித்ரா வருடம் : 1996


செம்பூவே பூவே உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே
படைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ
இமைகளும் உதடுகள் ஆகுமோ...
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ...

செம்பூவே பூவே உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே


அந்திச் சூரியனும் குன்றில் சாய
மேகம் வந்து கச்சை ஆக
காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்

தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் ஸ்வாசச் சூட்டின் காதல் குற்றாலம்

தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான்
சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா

நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி

கட்டிலும் கால்வலி கொள்ளாதோ...
கைவளை கைவளை கீறியதோ...


செம்பூவே பூவே உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே


இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று
காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ

அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு
பாவை நெஞ்சில் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே

விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலா
பாவை மையல் சாயுதே மன்னவனின் மார்பிலா
முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
நாணத்தாலோராடை சூடிக்கொள்வேன் நானே

பாயாகும் மடி சொல்லாதே...
பஞ்சணை புதையலின் ரகசியமே...

சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே...
செம்பூவே பூவே உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ...
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ...
படைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ...
இமைகளும் உதடுகள் ஆகுமோ....
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ...
செம்பூவே பூவே உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ...
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே...